செல்லப்பிராணிகள் எப்போதும் அவர்களது உரிமையாளர்களை அதிக நேசிக்கும் மற்றும் எப்போதும் விசுவாசமாக இருக்கிறது
நமது வீட்டை பாதுகாப்பது முதல், நமக்கு வரும் ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாப்பது முதல் அனைத்து வேலைகளையும் செய்கிறது.
சமூக வலைதளங்களில் செல்லப்பிராணிகள் தங்கள் உயிரை காப்பாற்றியதாக நூற்றுக்கணக்கான நெட்டிசன்கள் போஸ்ட்களை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கெல்லி ஆண்ட்ரூ என்பவர் ஹென்றி என்ற செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.
அதில் நோய்வாய்ப்பட்ட தனது மகளின் உயிரை தனது செல்ல நாய் காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ஷேர் செய்துள்ள ஒரு படத்தில் ஹென்றி என்ற நாய் உள்ளது, மற்றொரு படத்தில் மருத்துவமனையில் படுக்கையில் தனது குழந்தையுடன் தந்தை இருக்கும் காட்சிகள் உள்ளது.
இதுகுறித்து விளக்கியுள்ள கெல்லி, தனது நாய் ஹென்றி இரவு நேரத்தில் தங்கள் அறைக்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த குழந்தையை எழுப்ப முயன்றது.
இதனை பார்த்த எனக்கு ஹென்றியின் செயல் பிடிக்கவில்லை, அதனால் அதனை வெளியே அனுப்ப முயற்சி செய்தேன். அப்போது தான் என் மகளின் மூச்சு விட சிரமத்துடன் இருப்பதை நான் கவனித்தேன். அதன் பிறகு அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரவு முழுவதும் அங்கேயே இருந்தோம்.
ஹென்றி எனது மகளை எழுப்ப முயற்சிக்காமல் இருந்திருந்தால், அவரது நிலை குறித்து எங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கும் அந்த நேரத்தில் ஏதாவது நடந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹென்றி உதவி செய்த நிலையில் நாங்கள் அதனை துரத்த முயன்றதால் நாங்கள் நாய்கள் வளர்க்க தகுதியற்றவர்கள் என்றும் சோகமாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது அடுத்த பதிவில், மகள் நலமுடன் இருப்பதாக அறிவித்துள்ளார். அதில். என் மகள் முன்பை விட நன்றாக இருக்கிறாள், இப்போது அவளை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.
தற்போது நாங்கள் ஹென்றியுடன் வீட்டில் இருக்கிறோம், இருட்டைக் கண்டு மிகவும் பயப்படும் ஹென்றி, இரவு முழுவதும் தனியாக வீட்டை பாதுகாத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ட்வீட்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை இது 102.5K க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், 10,000 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் குவித்துள்ளது.
மேலும் ஏராளமானோர் இதற்கு கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர். கெல்லியின் இந்த முழு கதையை பார்த்த யூசர்கள் ஹென்றியை வீரன், ஹீரோ என்றும் கூறினர்.