திருநங்கை திருமணத்தை கோயிலில் நடத்த நிர்வாகம் மறுப்பு! ஏமாற்றத்துடன் சென்ற ஜோடி!

transgenter1 - 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோவிலில் திருநங்கையின் திருமணத்தை நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால் திருமணம் செய்ய இயலாமல் ஜோடி ஏமாற்றத்துடன் வெளியேறியது.

புதன் கிழமை இன்று காலை மணி 10.45 முதல் 11.45 வரை தூத்துக்குடி அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நடைபெறுவதாக தீர்மானிக்கப் பட்டிருந்தது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜி.பாலசுப்ரமணியன், பி சுப்புலெட்சுமி தம்பதியின் மகன் அருண் குமாருடன், தூத்துக்குடி பேச்சிராமன், வள்ளி தம்பதியின் மகள் ஸ்ரீஜாவுக்கு திருமணம் நடத்தப் படும் என்று அழைப்பிதழ் அச்சடித்து அனைவரையும் அழைத்திருந்தனர்.

தொடர்ந்து முந்தைய நாளே அழைப்பிதழையும் கொடுத்து, கோயிலில் திருமணத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, ரூ.600 பணம், கொடுத்துள்ளனர். ஆனால், நிர்வாக அதிகாரி இல்லாததால், பணத்தை மட்டும் பெற்றுக் கொண்ட கோயில் ஊழியர்கள், நாளை வரும் போது கேட்டு வைக்கிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை நம்பி, இன்று காலை கோயிலுக்கு வந்தவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.  திருநங்கையான ஸ்ரீஜா திருமணத்தை கோயிலில் வைத்து நடத்துவதற்கு, சட்டத்தில் இடமில்லை என்று கூறி, கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கோயிலில் திருமணத்தை நடத்தக் கூடாது என்றும் கூறிவிட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

பின்னர் கோயில் வெளியே, தங்களுக்குள் தாலியை எடுத்து கழுத்தில் கட்டி, நட்புகளுடன் திருமணத்தை முடித்துக் கொண்டு, காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். தொடர்ந்து, திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி, பதிவுத்துறை அலுவலகத்துக்கு படை எடுத்தனர். இவர்களின் வாக்குவாதங்களால்  கோயில் மற்றும் காவல் நிலையங்களில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

transgenter marriage - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories