திருநங்கை திருமணத்தை கோயிலில் நடத்த நிர்வாகம் மறுப்பு! ஏமாற்றத்துடன் சென்ற ஜோடி!

transgenter1 - 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோவிலில் திருநங்கையின் திருமணத்தை நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால் திருமணம் செய்ய இயலாமல் ஜோடி ஏமாற்றத்துடன் வெளியேறியது.

புதன் கிழமை இன்று காலை மணி 10.45 முதல் 11.45 வரை தூத்துக்குடி அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நடைபெறுவதாக தீர்மானிக்கப் பட்டிருந்தது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜி.பாலசுப்ரமணியன், பி சுப்புலெட்சுமி தம்பதியின் மகன் அருண் குமாருடன், தூத்துக்குடி பேச்சிராமன், வள்ளி தம்பதியின் மகள் ஸ்ரீஜாவுக்கு திருமணம் நடத்தப் படும் என்று அழைப்பிதழ் அச்சடித்து அனைவரையும் அழைத்திருந்தனர்.

தொடர்ந்து முந்தைய நாளே அழைப்பிதழையும் கொடுத்து, கோயிலில் திருமணத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, ரூ.600 பணம், கொடுத்துள்ளனர். ஆனால், நிர்வாக அதிகாரி இல்லாததால், பணத்தை மட்டும் பெற்றுக் கொண்ட கோயில் ஊழியர்கள், நாளை வரும் போது கேட்டு வைக்கிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை நம்பி, இன்று காலை கோயிலுக்கு வந்தவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.  திருநங்கையான ஸ்ரீஜா திருமணத்தை கோயிலில் வைத்து நடத்துவதற்கு, சட்டத்தில் இடமில்லை என்று கூறி, கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கோயிலில் திருமணத்தை நடத்தக் கூடாது என்றும் கூறிவிட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ALSO READ:  கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

பின்னர் கோயில் வெளியே, தங்களுக்குள் தாலியை எடுத்து கழுத்தில் கட்டி, நட்புகளுடன் திருமணத்தை முடித்துக் கொண்டு, காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். தொடர்ந்து, திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி, பதிவுத்துறை அலுவலகத்துக்கு படை எடுத்தனர். இவர்களின் வாக்குவாதங்களால்  கோயில் மற்றும் காவல் நிலையங்களில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

transgenter marriage - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories