February 13, 2025, 10:58 AM
25.6 C
Chennai

கருணாநிதி பாணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாபம்!

அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று டொனால்டு டிரம்ப், திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் பாணியில் சாபம் விட்டுள்ளார்.

தற்போது நடந்து வரும் மாகாண தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று கூறியுள்ளார் டிரம்ப்.

அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியின் டிரம்ப் 2017 ல் பதவியேற்றார்! மிகப்பெரும் பணக்கார தொழில் அதிபரான அவர் அடுத்த வருடம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.

ஆனால், அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது! இது தொடர்பாக பார்லிமென்ட் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மாகாண தேர்தல் நடந்து வருகிறது.

இதுவரை நடந்த தேர்தல்களில் பல்வேறு இடங்களில் குடியரசு கட்சி பெரும் தோல்விகளை சந்தித்து வருகிறது! கவர்னர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ள லூசியானா மாகாணத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் டிரம்ப்.

அப்போது பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பெற்று வருகிறோம் இதைவிட சிறப்பானது விரைவில் நடைபெற உள்ளது! அரசியல் ரீதியில் பழிவாங்கும் வகையில் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக என்மீது ஜனநாயக கட்சி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

இதற்கெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை; என்னுடைய தலைமையில் அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது! அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மோசமான நிலையை ஏற்படுத்திவிடும்! – என்று அவர் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களை பயமுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இவ்வாறுதான், தான் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப் படாவிட்டால், நாடு மோசமாகிவிடும் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார். தான் தோல்வி அடைந்தபோது தமிழக வாக்காளர்களை படுகேவலமாக திட்டித் தீர்த்தார்! தமிழனுக்கு உணர்வில்லை, சூடு இல்லை சுரணை இல்லை என்றெல்லாம் திட்டித் தீர்த்தார். ஒருவேளை டிரம்பும் இவ்வாறு அமெரிக்க மக்களை திட்டித் தீர்க்கும் நிலை வருமோ?!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories