கருணாநிதி பாணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாபம்!

Pakistan Could Be Put On Donald Trumps Immigration Ban - 2026

அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று டொனால்டு டிரம்ப், திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் பாணியில் சாபம் விட்டுள்ளார்.

தற்போது நடந்து வரும் மாகாண தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்று கூறியுள்ளார் டிரம்ப்.

அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியின் டிரம்ப் 2017 ல் பதவியேற்றார்! மிகப்பெரும் பணக்கார தொழில் அதிபரான அவர் அடுத்த வருடம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.

ஆனால், அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது! இது தொடர்பாக பார்லிமென்ட் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மாகாண தேர்தல் நடந்து வருகிறது.

இதுவரை நடந்த தேர்தல்களில் பல்வேறு இடங்களில் குடியரசு கட்சி பெரும் தோல்விகளை சந்தித்து வருகிறது! கவர்னர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ள லூசியானா மாகாணத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் டிரம்ப்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

அப்போது பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பெற்று வருகிறோம் இதைவிட சிறப்பானது விரைவில் நடைபெற உள்ளது! அரசியல் ரீதியில் பழிவாங்கும் வகையில் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக என்மீது ஜனநாயக கட்சி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

இதற்கெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை; என்னுடைய தலைமையில் அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது! அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மோசமான நிலையை ஏற்படுத்திவிடும்! – என்று அவர் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களை பயமுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இவ்வாறுதான், தான் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப் படாவிட்டால், நாடு மோசமாகிவிடும் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார். தான் தோல்வி அடைந்தபோது தமிழக வாக்காளர்களை படுகேவலமாக திட்டித் தீர்த்தார்! தமிழனுக்கு உணர்வில்லை, சூடு இல்லை சுரணை இல்லை என்றெல்லாம் திட்டித் தீர்த்தார். ஒருவேளை டிரம்பும் இவ்வாறு அமெரிக்க மக்களை திட்டித் தீர்க்கும் நிலை வருமோ?!

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories