December 5, 2025, 3:00 PM
27.9 C
Chennai

முதலிரவு என்றாலும் முதலில் கிரிக்கெட் தான்! பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்!

pak cri fan 1 - 2025

கிரிக்கெட்-என்ற சொன்னாலே எல்லாவற்றையும் விட்டு விட்டு அதில் மூழ்கி போக தயாராக இருக்கும் ரசிகர்களைக் கொண்டது கிரிக்கெட் விளையாட்டு.

அப்படி ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர், கிரிக்கெட் பார்த்துக்கொண்டே தனது திருமணச் சடங்குகளில் பங்கேற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய அணியுடன் T-20 போட்டிகளிலும் டெஸ்ட் தொடர்களிலும் விளையாடி வருகிறது.

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் T-20 போட்டி மழையின் காரணமாக நின்றுபோன நிலையில், இரண்டாவது T-20 போட்டி கடந்த 5-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ராவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களைச் சேர்த்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

pak cri fan - 2025

இந்தநிலையில், அமெரிக்காவில் வசித்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் தஸ்லீம் என்ற தீவிர கிரிக்கெட் ரசிகரின் திருமணம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.
ஹசனுக்கு கிரிக்கெட் பார்க்காமல் திருமணச் சடங்குகளில் அரைமனதாகப் பங்கேற்க விருப்பமில்லை. எனவே, மணமகளுடன் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே திருமணச் சடங்குகளில் பங்கேற்றுள்ளார்.

அந்தப் புகைப்படத்தைத் தனது இணையத்தில் பகிர்ந்த ஹசன் தான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்றும் எப்போதும் மேட்ச் பார்ப்பதைத் தவறவிட்டதில்லை என்றும் தனது திருமண இரவாக இருந்தாலும் கிரிக்கெட் பார்ப்பதைத் தவற விடமாட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு இணையத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது ட்விட்டர் பக்கத்தில் ஹசனின் போஸ்ட்டைப் பகிர்ந்து அமெரிக்க கிரிக்கெட் ரசிகரிடம் ஒரு மெசேஜ் வந்துள்ளது' எனப் பதிவிட்டுCouple Goals’ ஹேஷ்டேக் மூலம் வாழ்த்துச்செய்தியைத் தெரிவித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories