உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழக்க வேண்டிய பந்துக்கு நோ பால் என அறிவித்து ஆட்டம் இழக்காமல் அவர் தொடர்ந்து விளையாடி சதம் அடிக்க விட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அம்பயரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி இந்திய அணியுடன் மோதியது. இதில் வங்கதேச அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் ரோகித் சர்மா ருபெல் ஹூசைனின் ஃபுல்டாஸ் பந்தை அடித்ததில் கேட்ச் கொடுத்தார். ஆனால், நடுவர்கள் அவுட் கொடுக்காமல் அதை நோ பால் என அறிவித்தனர். பந்து இடுப்புப் பகுதிக்கு மேல் ஃபுல்டாசாக வீசப்பட்டதால் இவ்வாறு தெரிவித்தனர். நடுவரின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடுவர்கள் இந்திய அணிக்கு சாதகமாக செயல்பட்டதாகக் கூறி நடுவரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ரோஹித்துக்கு நோ பால் வழங்கிய அம்பயரின் உருவபொம்மை எரிப்பு: வங்கதேச ரசிகர்கள் மூட் அவுட்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari