உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழக்க வேண்டிய பந்துக்கு நோ பால் என அறிவித்து ஆட்டம் இழக்காமல் அவர் தொடர்ந்து விளையாடி சதம் அடிக்க விட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அம்பயரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி இந்திய அணியுடன் மோதியது. இதில் வங்கதேச அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் ரோகித் சர்மா ருபெல் ஹூசைனின் ஃபுல்டாஸ் பந்தை அடித்ததில் கேட்ச் கொடுத்தார். ஆனால், நடுவர்கள் அவுட் கொடுக்காமல் அதை நோ பால் என அறிவித்தனர். பந்து இடுப்புப் பகுதிக்கு மேல் ஃபுல்டாசாக வீசப்பட்டதால் இவ்வாறு தெரிவித்தனர். நடுவரின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடுவர்கள் இந்திய அணிக்கு சாதகமாக செயல்பட்டதாகக் கூறி நடுவரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ரோஹித்துக்கு நோ பால் வழங்கிய அம்பயரின் உருவபொம்மை எரிப்பு: வங்கதேச ரசிகர்கள் மூட் அவுட்!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

