ஏமன் நகரில் ஆதிக்கம் செலுத்தி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக, அண்டை நாடான சவுதி அரேபியா ஏமனில் 100 போர் விமானங்கள் மூலம் வான் வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமார் 150,000 ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக அல்-அரேபியா செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏமன் தலைநகரைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலை தொடங்கியது. ஏமன் தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் மாளிகையை இரண்டாவது முறையாக அவர்கள் நெருங்கிய நிலையில், மாளிகையிலிருந்து அதிபர் மன்சூர் ஹதி புதன்கிழமை வெளியேறினார். துறைமுக நகரான ஏடெனில் இருந்து இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விமானப்படைத் தளத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக வந்த தகவலை அடுத்து அவர் வெளியேறியுள்ளார். அவர் கடல் வழியாகத் தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending