ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் மாயம்! கடத்தல்?

Published:

kidnap - 2026

பொங்கல் பண்டிகை முடிந்து வழக்கம்போல் நேற்று தமிழகம் முழுவதும் பள்ளி தொடங்கியது. இதில் சென்னை அடுத்து ஆவடியில் உள்ள காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில் அந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மட்டும் நேற்று வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்படி சென்னை மாநகர காவல்துறையினர் உயர் எச்சரிக்கை கொடுத்து அனைத்து காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவிகள் ஒன்றாக விட்டைவிட்டு வெளியேறினரா?, யாரேனும் கடத்திச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற 4 மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img