ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில்… இந்த பெண் தாசில்தார் செய்ததை பாருங்க!

Published:

IMG 20191106 WA0015 - 2026

தெலுங்கானாவில் ஒரு தாசில்தார் எரிக்கப்பட்ட நிலையில் இந்த பெண் தாசில்தார் முன் ஜாக்கிரதையாக என்ன செய்துள்ளார் என்று பாருங்கள் ….

பத்திகொண்டா எம்ஆர்ஓ அலுவலகத்தில் தாசில்தார் நாற்காலி அருகில் யாரும் நெருங்க முடியாதபடி குறுக்காக கயிறு கட்டினார்.

தெலங்காணா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மேட் தாசில்தார் விஜயா ரெட்டியை உயிரோடு எரித்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து வருவாய்த்துறை ஊழியர்கள் இன்னும் விடுபடவில்லை.

கர்நூல் மாவட்டம் பத்திகொண்டா தாசில்தார் உமாமகேஸ்வரி தன் சேம்பரில் குறுக்காக கயிறு கட்டியுள்ளார்.

விண்ணப்பம் கொடுக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் கயிறுக்கு அப்புறம் இருந்தே கொடுக்க வேண்டும் என்றும் உள்ளே யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் பணியாளர்களிடம் உத்தரவிட்டுள்ளார்.

தாசில்தாரின் செயலைப் பார்த்து பணியாளர்கள் மட்டுமின்றி வரும் பொது மக்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தாசில்தார் உமா மகேஸ்வரியை நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “எங்க பாதுகாப்பில் ஜாக்கிரதையாக நாங்க இருக்க வேண்டாமா?” என்று பதிலளித்துள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img