ஆந்திராவில் கரோனாவால் பெரும் பாதிப்பு..! பாவம் விவசாயிகள்!

Published:

andhra chilli2 - 2026

ஆந்திரா விவசாயிகளுக்கு கரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிளகாய் விலை ஒரேடியாக படுத்துவிட்டதுதான் அதற்குக் காரணம்.

சைனாவை நடுங்க வைக்கும் கரோனா வைரஸ் சிறிது சிறிதாக பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா நோய் பதிவாகி உள்ளது. இதன் எஃபெக்ட் இப்போது குண்டூர் மிளகாய் மேல் விழுந்துள்ளது. மிளகாய் விலை பாதியாக குறைந்து விட்டது.

முன்பு குவின்டால் இருபதாயிரம் விற்ற மிளகாய் திடீரென்று பத்தாயிரத்திற்கு படுத்துவிட்டது. கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நின்று போனதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

andhra chilli1 - 2026

ஆசியாவிலேயே மிகப் பெரும் மிளகாய் மார்க்கெட்டாக பெயர்பெற்ற குண்டூர் மிர்ச்சி யார்டில் ஜனவரி தொடக்கத்தில் குவிண்டால் இருபதாயிரம் விலை போனது. 10 நாட்களுக்கு முன் 10 ஆயிரமாக படுத்து விட்டது.

குண்டூரில் வாங்கிய மிளகாயை வியாபாரிகள் சைனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். கரோனா பயத்தால் ஏற்றுமதி செய்வது அங்கங்கே தேங்கி நின்று விட்டன. பிற நாடுகளும் இறக்குமதியை நிறுத்தி விட்டதால் மிளகாய் விலை படுத்துவிட்டது.

andhra chilli - 2026

விலை ஆர்வம் ஊட்டும் விதத்தில் இருக்கிறது என்று நம்பிக்கையோடு இந்த சீசனில் மிளகாயை மிகப்பெரிய அளவில் விவசாயிகள் சாகுபடி செய்தார்கள். தற்போது கரோனா பாதிப்பால் விவசாயிகள் குழப்பத்திலும் கவலையிலும். ஆழ்ந்துள்ளார்கள்!

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img