அடப்பாவமே! இப்படியும் நடக்குமா? குரங்குகள் குதறி… பெண் உயிரிழந்த சோகம்!

Published:

monkeys attack - 2026

குரங்குக் கூட்டம் தாக்கியதில் பெண் உயிரிழந்தது தெலங்காணா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்காணா மாநிலத்தில் குரங்குகள் கிராமங்களுக்குள் அடிக்கடி படையெடுப்பு நடத்துவது போல ஒரேடியாக கூட்டம் கூட்டமாக வந்து திடீர் தாக்குதலை நடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குரங்குகள் ஒரு கூட்டமாக வரும்போது, குறுக்கே மனிதர்கள் யாராவது சென்றுவிட்டால், அவர்களை ஒரு கை பார்த்து விடுகின்றன என்கின்றனர்.

காடுகளில் இருக்கவேண்டிய விலங்குகள் வீடுகளுக்குள் புகுந்து நாசம் செய்வதாகக் கூறும் கிராமத்தினர், உணவுக்காகவும் சில குரங்குகள் தண்ணீருக்காகவும் கிராமங்களுக்குள் புகுந்து நாசம் செய்கின்றன என்றும், சில முரட்டுக் குரங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து மக்களைத் தாக்கி விடுகின்றன என்றும் கூறும் பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினரிடம் தாங்கள் புகார் தெரிவித்தும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை என்கின்றனர்.

தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் கிராமத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தெலங்காணா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் குரங்குகளின் கூட்டம் ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தியதில், அந்தப் பெண் இறந்து போனார்.

போத் என்னுமிடத்தில் குரங்குகளின் கூட்டம் ஜங்குபாயி என்ற பெண்ணின் வீட்டிற்குள் புகுந்தன. அந்தக் குரங்குகளை விரட்டுவதற்கு முயற்சி செய்தார் அந்தப் பெண். அதனால் கோபம் அடைந்த குரங்குகள் ஒன்று சேர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தின. படு காயங்களுடன் அவதிப்பட்ட ஜங்குபாயி அங்கேயே உயிரிழந்தார். அதனால் கிராமத்தில் சோகம் மூண்டது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

குரங்குகளின் அட்டூழியத்தை எவ்வளவுதான் எடுத்துச் சொல்லியும், வனத் துறையினர் கண்டுகொள்வதில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். இதனிடையே, குரங்கின் தாக்குதலால் இறந்த ஜங்குபாயின் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் செய்வதாக போத் பகுதி வனத் துறை ரேஞ்ச் அதிகாரி சத்தியநாராயணா அம்மக்களிடம் உறுதி கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருப்போம் என்று கூறிய அவர், பெண்ணை குரங்கு தாக்கி இறந்ததில் எங்களுடைய செயல் எதுவும் இல்லை என்றும் அவர்களிடம் விளக்கியுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img