முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தாதோர் பட்டியலில் உள்ளதாக புது தில்லி மாநகராட்சி தெரிவித்தது. சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கெளடா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நஜ்மா ஹெப்துல்லா, ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் பிரசாத் நிஷாத், எல்.கே.அத்வானி, திக்விஜய் சிங், ஜெகதீஷ் டைட்லர் உள்பட 166 மக்களவை உறுப்பினர்களும், 151 மாநிலங்களவை உறுப்பினர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தாமல் உள்ளனர். நிஷாத் ரூ.18.47 லட்சமும், தேவ கெளடா ரூ.1.49 லட்சமும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ.1.27 லட்சமும் வரி பாக்கி செலுத்தாமல் உள்ளனர். மன்மோகன் சிங் ரூ.22,934-ம், அத்வானி ரூ.3,311-ம், ஸ்மிருதி இரானி ரூ.12,934-ம், நஜ்மா ஹெப்துல்லா ரூ.1,627-ம் வரி பாக்கி வைத்துள்ளனர். சோனியா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் முறையே ரூ.193, ரூ.206 வரி பாக்கி வைத்துள்ளனர்.
Popular Categories