ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சம்பா மாவட்டத்தில் சனிக்கிழமை இன்று காலை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ராணுவ முகாமுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தத் தாகுதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதால் சம்பா மாவட்ட ராணுவ பள்ளியில் இன்று நடைபெறுவதாக இருந்த 9, 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari