ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து முதல்வர் கேசிஆர் ஆறுதல்!

Published:

tamilisai kcr - 2026

தெலங்காணா முதல்வர் கேசிஆர் சனிக்கிழமையன்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனை ராஜ்பவனுக்கு சென்று சந்தித்தார்.

கவர்னரை அவருடைய சித்தப்பாவின் மறைவு குறித்து விசாரிப்பதற்காக சென்றதாக தெரிகிறது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் சிற்றப்பா வசந்தகுமார் வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

கவர்னரின் தந்தை குமரி அனந்தன் கூட சற்று உடல் நலம் இன்றி இருக்கிறார். அதனால் கேசிஆர் சனிக்கிழமை ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை விசாரித்தார். தந்தையின் உடல்நிலை குறித்து கூட முதலமைச்சர் கேசிஆர் கவர்னரை கேட்டு தெரிந்து கொண்டார்.

செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து 20 நாட்களுக்கு தெலங்காணா அசெம்பிளி கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. அது குறித்து கூட முதல்வர் கவர்னர் இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் கோவிட்19 நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூட்டத்தொடரை நடத்துவோம் என்றும் அங்கத்தினர்களின் இடையே சமூக இடைவெளி இருக்கும்படியாக எச்சரிக்கையாக இருப்போம் என்றும் கேசிஆர் கவர்னரிடம் தெரிவித்தார். அசெம்பிளி கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப் போகும் பில்கள் குறித்தும் கவர்னர் தமிழிசைக்கு முதல்வர் விவரித்ததாக தெரிகிறது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img