தண்டவாளத்தைக் கடக்கும் போது வந்த ரயில்! அடியில் படுத்து உயிர் தப்பிய பெண்!

Published:

lady-under-the-train
lady-under-the-train

தண்டவாளத்திற்கு நடுவே படுத்து உயிர்தப்பிய பெண்ணின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலம் ரோஹ்டேக்கில் சிக்னலுக்காக ரயில் ஒன்று காத்திருந்தது. அப்போது தண்டவாளத்தை கடந்து செல்ல பெண் ஒருவர் முயன்றுள்ளார்.

train
train

ஆனால் எதிர்பாராத விதமாக சிக்னல் கிடைத்தவுடன் ரயில் புறப்பட்து. ரயில் நகரத் தொடங்கியதும், தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், சுதாரித்துக்கொண்ட ரயில் தண்டவாளத்திற்கு நடுவே படுத்துக்கொண்டார்.

ரயில் சென்ற பின், பெண் எழுந்து சென்றார். ரயில் தண்டவாளத்தில் கடந்து செல்ல, பெண் நடுவே படுத்துக்கொண்ட சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img