செல்ஃபி எடுக்க ஆற்றில் இறங்கிய சிறுமிகள்! நீரில் முழ்கி உயிரிழப்பு!

Published:

telunghana - 2026

தெலங்கானாவில் ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்ற 3 இளம்பெண்கள், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம், நிர்மல்மாவட்டம், தானூரு கிராமத்தை சேர்ந்த அஸ்மதா (15), இவரது தங்கை வைஷாலி (13), இவர்களின் உறவினர் அஞ்சலி (15) ஆகிய மூவரும் தங்கள் பாட்டி மங்கபாயுடன் விவசாயப் பணிக்குச் சென்றனர்.

வெயில் அதிகமாக இருந்ததால், பேத்திகள் மூவரையும் வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு, மங்கபாய் மட்டும் விவசாயப் பணியில் ஈடுபட்டார்.

இளம்பெண்கள் மூவரும் வீட்டுக்கு திரும்பும் வழியில் சிங்கன்காவ் எனும் ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது மூவரும் ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பின்னர் வீடு திரும்பிய மங்கபாய், பேத்திகள் இல்லாததை கண்டு பல இடங்களிலும் தேடினார். இறுதியில் அவர்களை ஆற்றங்கரையில் பார்த்ததாக ஒருவர் கூறினார்.

தகவல் அறிந்த தானூரு போலீஸார் அங்கு விரைந்து சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் மூவரின் சடலங்களையும் மீட்டனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img