லவ் ஜிகாத்: காதலித்து ஏமாற்றி அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை! விற்கவும் ஏற்பாடு!

Published:

woman 2
woman 2

ஒரு பெண்ணை காதலித்து ஒரு அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த நபரிடமிருந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டனர்

உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் 13 வயதான பெண்ணொருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் வசிக்கும் ரகீம் என்ற பீடி விற்பனை செய்பவரை காதலித்தார்.

அவரும் இந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதனால் அந்த ரகீம் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தை கூறினார். அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவரோடு ஜூன் 14ம் தேதி கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையில் அவரோடு வீட்டை விட்டு வெளியேறினார்.

பிறகு ரகீம் அந்த பெண்ணை சலார்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் அவர் அந்த பெண்ணை ஒரு அறையில் வைத்து பூட்டினார்.

vankodumai - 2026

அதன் பிறகு தினமும் அவரை பலாத்காரம் செய்தார். பிறகு அந்த பெண்ணை வேறொரு நபருக்கு விற்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அந்த பெண் அவரிடமிருந்து ஜூலை மாதம் 3ம் தேதி தான் இருக்குமிடத்தை அவரின் குடும்பத்தினருக்கு கூறினார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

பிறகு அவரின் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்ததும் போலீசார் வழக்கு பதிந்து அந்த ரகீம் இருக்குமிடத்தை கண்டுபிடித்து , அந்த டீனேஜ் பெண்ணை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.

Related articles

Recent articles

spot_img