சென்னையில் தொடங்கிய மாபெரும் ராணுவ தளவாடக் காட்சி: யுடியூப், டிவிட்டரில் லைவ்!

Published:

defence thiruvidenthai - 2026

சென்னை திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சி தொடங்கியது. நாட்டிலேயே சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சிதான் மிகப் பெரிராணுவ தளவாட கண்காட்சி, பேஸ் புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.யதாகும். ராணுவ தளவாடக் கண்காட்சியை இறுதி நாளான 14 ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிடலாம்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் சுமார் ரூ.800 கோடியில், 10வது ராணுவ தளவாடக் கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.  நமது நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட ராணுவ தளவாட கண்காட்சிகளில் இது மிகப்பெரிது.

ராணுவ தளவாடக் கண்காட்சி, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஏப்.11 இன்று துவங்கிய இந்தக் கண்காட்சியின் இரண்டாள் நாளான நாளை பிரதமர் பார்வையிடுகிறார். கண்காட்சியின் மூன்றாவது நாளான 13ஆம் தேதி, இந்திய-ரஷிய ராணுவ தொழில் துறை மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் 200 தொழில் அதிபர்களும், ரஷியாவின் தரப்பில் 100 தொழில் அதிபர்களும் கலந்து கொள்கிறார்கள்.
4ஆவது நாள் (ஏப்.14) இந்தக் கண்காட்சியை  பொதுமக்கள் பார்வையிடலாம்.  பொதுமக்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு ராணுவ தளவாட கண்காட்சி இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான ஒப்புகை சீட்டை கொண்டு, கண்காட்சி நடைபெறும் இடத்தில் நுழைவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்பதாக 50க்கும் மேற்பட்ட நாடுகள், 700க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்.  இதன்  முக்கிய நோக்கம், நமது நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி திறனையும், ராக்கெட் உற்பத்தி திறனையும் உலகுக்கு பறை சாற்றுவதாக அமையும். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் நடத்துகிற சாகச காட்சிகள் என பலவற்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் 13-ந் தேதியும், 15-ந் தேதியும் நிறுத்தி வைக்கப்படும். அவற்றினுள் ஏறி பார்க்கவும் அனுமதிக்கப்படும்.
https://youtu.be/oR6Ose-G3bo
ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img