கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

Published:

koodankulam power project - 2026

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட உத்தரவிட முடியாது. கதிர்வீச்சு சாத்தியமுள்ள அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை உடனே கட்டுவது என்பது ஆபத்தில் முடியும் என்பதால் மத்திய அரசுக்கு 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் தேவைப்பட்டால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியது.

இதன் படி, கூடங்குளம் அணு உலை கழிவுகளை சேமிக்க புதிய கட்டுமானம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து, மத்திய அரசுக்கான கால அவகாசத்தை 2022 வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img