February 14, 2025, 11:26 AM
26.3 C
Chennai

மகாராஷ்ட்ராவில் வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

மகாராஷ்ட்ர மாநிலத்தில் வருகிற 29-ந்தேதி 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் மும்பை உள்பட 17 தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

நாடு முழுவதும் பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மராட்டியத்தில் 48 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

முதல் கட்டமாக வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளுக்கு வருகிற 11-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிவடைந்தது. இந்த 7 தொகுதிகளில் மொத்தம் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

2-ம் கட்டமாக வருகிற 18-ந்தேதி புல்தானா, அகோலா, அமராவதி, ஹிங்கோலி, நாந்தெட், பர்பானி, பீட், உஸ்மனாபாத், லாத்தூர், சோலாப்பூர் ஆகிய 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதிகளில் கடந்த 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 26-ந் தேதி முடிவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 10 தொகுதிகளில் 179 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல்கள் நடைபெறும் 17 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 295 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதிகளில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் (நாந்தெட்), முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, பிரகாஷ் அம்பேத்கர் (சோலாப்பூர்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இந்த தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தற்போது அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

3-ம் கட்டமாக ஜல்காவ், ராவேர், ஜல்னா, அவுரங்காபாத், ராய்காட், புனே, பாராமதி, அகமதுநகர், மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கனங்கலே ஆகிய 14 தொகுதிகளுக்கு வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

4-ம் கட்டமாக ஏப்ரல் 29-ந் தேதி நந்தூர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 9-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 10-ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. 12-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

மராட்டியத்தில் பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா- சிவசேனா, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன.

இதுதவிர சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வன்ஜித் பகுஜன் அகாடி கூட்டணி, பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. Hiya! Quick question that’s entirely off topic. Do you know how to make
    your site mobile friendly? My weblog looks weird
    when browsing from my iphone 4. I’m trying to find a template or plugin that might be able to resolve this problem.
    If you have any suggestions, please share. Thank you!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories