கடல் காற்று மட்டும் இல்லையென்றால் சென்னை நரகம் ஆகிவிடும். சென்னையின் பழைய அழகை மீட்டெடுக்க வேண்டும்.
மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப சென்னை நகரின் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.
அடையாறு, பங்கிங்கம், கூவம் கால்வாய்களை சுத்தப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். அந்த இடத்தில் பொழுது போக்கு வசதி, பூங்கா வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கழிவு நீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். கழிவு நீரை குழாய் மூலமாக கொண்டு சென்று தனியாக ஒரு இடத்தில சேகரித்து அதை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு தனி துறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று கருத்து கூறியது.