சென்னை: காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிய வலைதளங்கள் என போலீஸார் அறிவித்துள்ளனர். சென்னை போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்… பொதுமக்கள் தங்களது உறவினர்கள் அல்லது தெரிந்த நபர்கள் காணாமல் போனால் அது குறித்து சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகார் கொடுப்பதன்பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்று தமிழகத்தில் காணாமல் போன நபர்களின் விபரங்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்கள் தமிழக காவல்துறையில் உள்ள அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழக காவல்துறையினர் சேகரித்த விவரங்களை கீழ்காணும் வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆகவே, பொதுமக்கள் காணாமல் போன தங்களது உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களின் விவரங்களை i. www.tnpolice.gov.in ii. https://ncrb.gov.in iii. https://eservices.tnpolice.gov.in ஆகிய வலைதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending