சென்னை: காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிய வலைதளங்கள் என போலீஸார் அறிவித்துள்ளனர். சென்னை போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்… பொதுமக்கள் தங்களது உறவினர்கள் அல்லது தெரிந்த நபர்கள் காணாமல் போனால் அது குறித்து சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகார் கொடுப்பதன்பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்று தமிழகத்தில் காணாமல் போன நபர்களின் விபரங்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்கள் தமிழக காவல்துறையில் உள்ள அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழக காவல்துறையினர் சேகரித்த விவரங்களை கீழ்காணும் வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆகவே, பொதுமக்கள் காணாமல் போன தங்களது உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களின் விவரங்களை i. www.tnpolice.gov.in ii. https://ncrb.gov.in iii. https://eservices.tnpolice.gov.in ஆகிய வலைதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காணாமல் போன நபர்கள் குறித்து தகவல் அறிய இணையதளங்கள்: போலீஸார் அறிவிப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

