January 25, 2025, 1:49 PM
28.7 C
Chennai

செல்ஃபி மோகம்: படம் எடுத்த பாம்பை படம் பிடித்த புது மாப்பிள்ளை பரிதாப மரணம்

தாராபுரம்: செல்ஃபி மோகத்தில், தன் மீது ஊர்ந்து ஏறிய பாம்பைப் படம்பிடித்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய புது மாப்பிள்ளை விஷம் ஏறி பரிதாபமாக மரணம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரகுமார் (27). இவரது மனைவி செல்வி(23). இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில், வேலைக்குச் சென்று வீடு திரும்பிய சந்திரகுமார், இரவில் மது அருந்திவிட்டு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்திருந்தார். அப்போது, தனது செல்போனில் விளையாடத் தொடங்கினார். வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு படங்களை அனுப்பினார். அப்போது அவரது வீட்டின் அருகே வந்த பாம்பு ஒன்று, திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரகுமார் மீது ஊர்ந்தது. இரவில் ஏதோ ஊர்ந்தது போல் இருந்ததால், திடீரென விழித்த சந்திரகுமார், பாம்பு படமெடுத்தபடி நின்றதைக் கண்டார். தன் மடியில் ஊர்ந்த பாம்பை கையில் பிடித்து தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் ‘எனது வீர தீரச் செயலை பாருங்கள்’ என்று நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் படத்தை அனுப்பி வைத்தார். அந்நேரம் பாம்பு சந்திரகுமாரை பல இடங்களில் கொத்தியுள்ளது. விஷம் உடலில் பரவவே வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்த சந்திரகுமாரை அவரது மனைவி கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சந்திரகுமாரை சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ALSO READ:  ஜல்லிக்கட்டுக்குத் தயாராகிறது பாலமேடு! தயாராகும் பாதுகாப்பு வேலிகள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.