தாராபுரம்: செல்ஃபி மோகத்தில், தன் மீது ஊர்ந்து ஏறிய பாம்பைப் படம்பிடித்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய புது மாப்பிள்ளை விஷம் ஏறி பரிதாபமாக மரணம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரகுமார் (27). இவரது மனைவி செல்வி(23). இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில், வேலைக்குச் சென்று வீடு திரும்பிய சந்திரகுமார், இரவில் மது அருந்திவிட்டு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்திருந்தார். அப்போது, தனது செல்போனில் விளையாடத் தொடங்கினார். வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு படங்களை அனுப்பினார். அப்போது அவரது வீட்டின் அருகே வந்த பாம்பு ஒன்று, திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரகுமார் மீது ஊர்ந்தது. இரவில் ஏதோ ஊர்ந்தது போல் இருந்ததால், திடீரென விழித்த சந்திரகுமார், பாம்பு படமெடுத்தபடி நின்றதைக் கண்டார். தன் மடியில் ஊர்ந்த பாம்பை கையில் பிடித்து தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் ‘எனது வீர தீரச் செயலை பாருங்கள்’ என்று நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் படத்தை அனுப்பி வைத்தார். அந்நேரம் பாம்பு சந்திரகுமாரை பல இடங்களில் கொத்தியுள்ளது. விஷம் உடலில் பரவவே வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்த சந்திரகுமாரை அவரது மனைவி கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சந்திரகுமாரை சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செல்ஃபி மோகம்: படம் எடுத்த பாம்பை படம் பிடித்த புது மாப்பிள்ளை பரிதாப மரணம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari