தாராபுரம்: செல்ஃபி மோகத்தில், தன் மீது ஊர்ந்து ஏறிய பாம்பைப் படம்பிடித்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய புது மாப்பிள்ளை விஷம் ஏறி பரிதாபமாக மரணம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரகுமார் (27). இவரது மனைவி செல்வி(23). இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில், வேலைக்குச் சென்று வீடு திரும்பிய சந்திரகுமார், இரவில் மது அருந்திவிட்டு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்திருந்தார். அப்போது, தனது செல்போனில் விளையாடத் தொடங்கினார். வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு படங்களை அனுப்பினார். அப்போது அவரது வீட்டின் அருகே வந்த பாம்பு ஒன்று, திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரகுமார் மீது ஊர்ந்தது. இரவில் ஏதோ ஊர்ந்தது போல் இருந்ததால், திடீரென விழித்த சந்திரகுமார், பாம்பு படமெடுத்தபடி நின்றதைக் கண்டார். தன் மடியில் ஊர்ந்த பாம்பை கையில் பிடித்து தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் ‘எனது வீர தீரச் செயலை பாருங்கள்’ என்று நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் படத்தை அனுப்பி வைத்தார். அந்நேரம் பாம்பு சந்திரகுமாரை பல இடங்களில் கொத்தியுள்ளது. விஷம் உடலில் பரவவே வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்த சந்திரகுமாரை அவரது மனைவி கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சந்திரகுமாரை சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Hot this week
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
நெல்லை
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Topics
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
நெல்லை
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
சற்றுமுன்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...
சற்றுமுன்
திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

