ஜானகி அம்மா பேத்தி என்று பாராட்டப்பட்ட ஸ்ருதி!

sruthi யூடிபில் மட்டும் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ள “திக்கித் தெணறுது தேவதை” பாடல் மூலமாக அறிமுகமான ஸ்ருதி, இப்போது ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ், U.P.மருது இயக்கத்தில் வெளியாகியுள்ள “அகத்திணை” படத்தில் கவிஞர் வைரமுத்து வரிகளில் மரியா மனோகர் இசையில் உருவாகியுள்ள “தந்தையும் நீயே, தாய்மடி நீயே” என்ற பாடலை பாடியுள்ளார். தாய் இல்லாமல் தந்தையால் வளர்க்கப்படும் ஒரு பெண் குழந்தை, தன் தந்தையை பற்றி புகழ்ந்து பாடுவதாக அமைந்துள்ளது இந்த பாடல். மரியா மனோகரின் இசைக்கூடத்திற்கு இந்த பாடலை பாடுவதற்காக சென்ற ஸ்ருதியிடம், இந்தப்பாட்டு ஒரு பத்து வயது குழந்தை பாடுற பாட்டு, நீ பெரிய பொண்ணா இருக்கம்மா, உன்னோட குரல் செட்டாகுது, அடுத்த படத்தில் நீ பாடு என்றாராம், இசையமைப்பாளர் மரியா மனோகர். ஆனால், நான் பாடுறேன் சார் என்று சொன்ன ஸ்ருதி, பத்து வயது குழந்தை குரலில் பாடி அசத்தினாராம். பாடலைக்கேட்டவர்கள் அனைவரும் பாடலைப்பாடிய அந்த சிறுபெண் யாரெனக் கேட்க, தற்போது +2 படித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதி தான் இந்த பாட்டை பாடினாள் என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர். பாடலையும் இந்த தகவலையும் கேட்ட அனைவரும் ஆச்சர்யம் அடைந்ததோடு ஸ்ருதியை வெகுவாகப்பாராட்டியுள்ளனர். அதோடு தமிழ் சினிமாவில் குழந்தை குரலில் ஜானகி அம்மா தான் பாடி அசத்துவாங்க. அப்டி பாத்தா உன்னை ஜானகி அம்மா பேத்தின்னு சொன்னாலும் தப்பில்ல என்று சிலர் பாராட்டியதைக் கேட்டு மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் ஸ்ருதி. ஜானகி அம்மா பெரிய லெஜண்ட், அவங்களுக்கு இணை அவங்க மட்டும் தான்… நான் இப்போ தான் சினிமாவுக்கே வந்திருக்கேன். அவங்களோடு சேர்ந்து என் பெயர் சொல்லப்படுவதை என் பாக்கியமாக சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன், என்கிறார் ஸ்ருதி. இந்த வாய்ப்பை எனக்கு தந்த மரியா மனோகர் சாருக்கும் எழுதிய வைரமுத்து சாருக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றிகள். மதுரை மாவட்டம், தேசிய செய்திகள், பள்ளிசாலை, சயனம், சாந்தம், ரணம் உள்பட பல படங்களில் ஸ்ருதி குரலில் பாடல்கள் பதிவாகி உள்ளன. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=TryKxMghwSI&feature=share”]

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories