January 21, 2025, 5:04 AM
23.2 C
Chennai

தமிழக அரசு பரிந்துரைத்தால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்குமாம்!

சென்னை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என கும்மிடிப்பூண்டி வந்த மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்ப இலங்கை அகதிகள் முகாமை மத்திய உள்விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் முகாம் தலைவர் சிவகுமார் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், இலங்கை தமிழ்ப் பகுதியில் 13 வது சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அகதி முகாம்களில் உள்ள உயர் கல்வி மாணவர் களுக்கு அரசு கல்வி கட்டணம் அளிக்க வேண்டும், கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கடவுச் சீட்டு, விசா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. பிறகு, அகதிகள் மத்தியில் அமைச்சர் பேசும்போது, ‘தமிழக அரசு, அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவிகளை செய்து வருகிறது. முகாமில் எவ்வளவு காலம் அகதிகள் வசிக்க விரும்புகிறார்களோ, அவ்வளவு காலம் வரை, அவர்களுக்கு தேவையான கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். அகதிகளுக்கான பாஸ்போர்ட், விசா தொடர்பான அகதிகளின் கோரிக்கைகள் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும். ஐ.நா.சபையில் அகதிகள் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடவில்லை. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தப்படுகிறது. மேலும், அகதிகளுக்கான கொள்கை குறித்து தேவைப்பட்டால் விவாதித்து அரசு முடிவெடுக்கும் என்றார்.

ALSO READ:  IND Vs NZ Test: சுந்தரமான சுழல்பந்து வீச்சு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...