சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி.பெட்டி இணைக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … சென்னை எழும்பூர்-நெல்லை (வ.எண். 12631) மற்றும் நெல்லை-எழும்பூர் (வ.எண்.12632) இடையே இயக்கப்படும் ‘நெல்லை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் நிரந்தரமாக குளு, குளு வசதியுடைய மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து புறப்படும் ரெயிலில் இன்று (வியாழக்கிழமை) முதலும், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதலும் இந்த புதிய ஏ.சி. பெட்டி இணைக்கப்படும். இதே போன்று சென்னை எழும்பூர்-செங்கோட்டை (வ.எண்.12661) மற்றும் செங்கோட்டை- எழும்பூர் (வ.எண். 12662) ‘பொதிகை எக்ஸ்பிரஸ்’ ரெயிலிலும் நிரந்தரமாக மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதலும், செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயிலில் 14-ந் தேதி (சனிக்கிழமை) முதலும் இந்த புதிய பெட்டி இணைக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லை, பொதிகை ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி இணைப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari