சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி.பெட்டி இணைக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … சென்னை எழும்பூர்-நெல்லை (வ.எண். 12631) மற்றும் நெல்லை-எழும்பூர் (வ.எண்.12632) இடையே இயக்கப்படும் ‘நெல்லை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் நிரந்தரமாக குளு, குளு வசதியுடைய மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து புறப்படும் ரெயிலில் இன்று (வியாழக்கிழமை) முதலும், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதலும் இந்த புதிய ஏ.சி. பெட்டி இணைக்கப்படும். இதே போன்று சென்னை எழும்பூர்-செங்கோட்டை (வ.எண்.12661) மற்றும் செங்கோட்டை- எழும்பூர் (வ.எண். 12662) ‘பொதிகை எக்ஸ்பிரஸ்’ ரெயிலிலும் நிரந்தரமாக மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதலும், செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயிலில் 14-ந் தேதி (சனிக்கிழமை) முதலும் இந்த புதிய பெட்டி இணைக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லை, பொதிகை ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி இணைப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

