சிதம்பரம்: சிதம்பரம் பல்கலைக்கழக மாணவன் தனியார் பஸ்ஸில் அடிபட்டு பலியான சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே லால்புரத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மாணவர் குணசேகரன் (வயது 19) மோட்டார் சைக்கிளில் உடற்பயிற்சி வகுப்புக்கு நேற்று காலை சென்றார். சிதம்பரம் கீழவீதியில் வந்தபோது, முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி, குணசேகரன் உயிரிழந்தார். இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் ஆழம்பாடியை சேர்ந்த பாலு மகன் பிரபாகரனை (37) கைது செய்து, சிறையில் அடைத்தார்.
சிதம்பரம் பல்கலை., மாணவன் பலி: பஸ் ஓட்டுநர் கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

