அரசு பேருந்து மோதி பெண் பலி; கல்வீச்சில் எஸ்பி.,மண்டை உடைந்தது; சாலைமறியலால் கடும் நெரிசல்!

sp injured chengalpet - 2026

செங்கல்பட்டு: சென்னை மறைமலை நகரை அடுத்த பெரமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நேற்று மாலை 8 மணிக்கு அஞ்சூர் மகேந்திரா சிட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் மூவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மகேந்திரா சிட்டி கூட்டு சாலையில் சென்னையிலிருந்து மரக்காணம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவர்கள் வந்த மோட்டார் பைக் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாவண்யா மற்றும் கணவர் குழந்தை 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

அப்போது லாவண்யா தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவரும், குழந்தையும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, பொது மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரா சிட்டி தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

தகவல் அறிந்து வண்டலூர் டிஎஸ்பி வளவன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை.

இதனிடையே காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஒரு சிலர் போலீசார் மீது சராமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.

கல்வீச்சில் காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி தலையில் கல் விழுந்ததில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதனிடையே, பலத்த காயமடைந்த எஸ்பியை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

உயிருக்குப் போராடிய லாவண்யாவின் கணவர் மற்றும் குழந்தையை போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று முகூர்த்த நாள் என்பதாலும், விடுமுறைதினம் என்பதாலும் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குக் கிளம்பியவர்கள் இதனால் கடும் அவதிப் பட்டனர்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories