December 6, 2025, 3:21 AM
24.9 C
Chennai

அரசு பேருந்து மோதி பெண் பலி; கல்வீச்சில் எஸ்பி.,மண்டை உடைந்தது; சாலைமறியலால் கடும் நெரிசல்!

sp injured chengalpet - 2025

செங்கல்பட்டு: சென்னை மறைமலை நகரை அடுத்த பெரமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நேற்று மாலை 8 மணிக்கு அஞ்சூர் மகேந்திரா சிட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் மூவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மகேந்திரா சிட்டி கூட்டு சாலையில் சென்னையிலிருந்து மரக்காணம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவர்கள் வந்த மோட்டார் பைக் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாவண்யா மற்றும் கணவர் குழந்தை 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

அப்போது லாவண்யா தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவரும், குழந்தையும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, பொது மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரா சிட்டி தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வண்டலூர் டிஎஸ்பி வளவன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை.

இதனிடையே காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஒரு சிலர் போலீசார் மீது சராமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.

கல்வீச்சில் காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி தலையில் கல் விழுந்ததில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதனிடையே, பலத்த காயமடைந்த எஸ்பியை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

உயிருக்குப் போராடிய லாவண்யாவின் கணவர் மற்றும் குழந்தையை போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று முகூர்த்த நாள் என்பதாலும், விடுமுறைதினம் என்பதாலும் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குக் கிளம்பியவர்கள் இதனால் கடும் அவதிப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories