சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை வியாழக்கிழமை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அரசு குழுவினருடன் குரோம்பேட்டையில் கடந்த 2–ந்தேதி முதல் கட்ட பேச்சு வார்த்ததை நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2–ம் கட்ட பேச்சு வார்த்தை நாளை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசு குழுவினருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். பேச்சு வார்த்தையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

