இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்து மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். மோடி மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாள் பயணமாக நாளை மறுநாள் வெளிநாடு செல்லும் மோடி மலேசியாவில் நடைபெற இருக்கும் 13 வது ஆசிய மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்கிறார்,ஆசிய நாடுகளுடனான வர்த்தகம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, முறைகேடான குடியேற்றம் போன்றவை குறித்து இந்த மாநாடுகளில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் மோடிமலேசியாவில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 23ம் தேதி சிங்கப்பூர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து 24ஆம் தேதி இந்திய திரும்புவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்ப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending