பிரதமர் மோடி அடுத்து மலேசியா, சிங்கப்பூர் பயணம் செய்ய திட்டம்

Published:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்து மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். மோடி மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாள் பயணமாக நாளை மறுநாள் வெளிநாடு செல்லும் மோடி மலேசியாவில் நடைபெற இருக்கும் 13 வது ஆசிய மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்கிறார்,ஆசிய நாடுகளுடனான வர்த்தகம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, முறைகேடான குடியேற்றம் போன்றவை குறித்து இந்த மாநாடுகளில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் மோடிமலேசியாவில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 23ம் தேதி சிங்கப்பூர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து 24ஆம் தேதி இந்திய திரும்புவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்ப்பட்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img