நண்பருக்கு வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடி பரிசளித்த கல்லூரி மாணவி

வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை இளம்பெண் ஒருவர் திருடி நண்பருக்கு பரிசளித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் சங்கர், என்பவருடைய மகள் நந்தினி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

சங்கரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணம் என மொத்தம் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் மாயமாகி இருப்பதை கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இருவரும் வீட்டில் தேடிப்பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து மகள் நந்தினியிடம் கூறியதோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அப்போது பெற்றோரிடம் கூறியநந்தினி, எனக்கும் எலகங்காவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கொடிகேஹள்ளி டாடா நகரை சேர்ந்த ஷாருக் முக்காந்தர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

எனது நண்பர் ஷாருக் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு மிக கஷ்டமானநிலையில் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார்.

அதனால் வீட்டில் இருந்த தங்க நகை, பணத்தை நான் தான் எடுத்து அவருக்கு பரிசளித்தேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினியின் பெற்றோர் நந்தினி பரிசளித்த நகை, பணத்தை ஷாருக்கிரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என நியூ டவுன் பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஷாருக் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில்அளித்த புகாரில், நந்தினியின் பெற்றோர் என்னை கடத்தி, 2 நாட்கள் சிறை வைத்து உடல் ரீதியாக தொல்லை தந்தனர்.

மேலும் நகை, பணத்தை திரும்ப கொடுப்பதாக நான் கூறியதை தொடர்ந்து அவர்கள் என்னை விடுவித்தனர் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

Entertainment News

Popular Categories