ரோஹித் சர்மாவும் விரைவில் காதலியை மணமுடிக்கிறார்

Published:

rohith-sharma இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவும் விரைவில் தனது காதலியை மணம் முடிக்க இருக்கிறார். தோனி, ரெய்னாவைத் தொடர்ந்து, தனது காதலியை கரம் பற்றி, ரோஹித்தும் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இவர் தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், ஐபிஎல் மும்பை அணியின் கேப்டனாகவும் திறம்பட செயலாற்றி வருகிறார். இந்நிலையில் ரோகித் சர்மா தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறார். இதுவரை தனியாளாக வலம் வந்துகொண்டிருந்த ரோஹித் சர்மா விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து ஜோடியாகவுள்ளார். ரோஹித்தின் காதலி பெயர் ரித்திகா சஜ்தே. கடந்த சில ஆண்டுகளாகவே ரோகித் சர்மாவின் விளம்பர மேலாளர் பணியை அவர் திறம்பட நிர்வகித்து வருகிறார். தொடக்கத்தில் நட்பாக இருந்த இவர்களது பந்தம் பின்னாளில் காதலாக மாறியதாம். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமண தேதியை அறிவிப்பேன் என ‘டுவிட்டரில் தகவல்’ தெரிவித்துள்ளார் ரோஹித் சர்மா.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img