ராமேஸ்வரம்: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர் சங்கங்களின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முழு அடைப்புக்கு ஆதரவு தருமாறு வரும் 15-ஆம் தேதிக்குப் பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவது என அந்த சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அண்மையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தில்லியில் வைத்து சந்தித்தனர். அப்போது தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக எல்லை தாண்டிச் செல்லக் கூடாது என்று அவர் எச்சரித்தார். எல்லை தாண்டும் மீனவர்களால் இந்தியா – இலங்கை இடையே பிரச்னை அதிகரிப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும், எல்லை தாண்டிச் சென்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு அதற்குப் பொறுப்பாகாது என்றும் தம்மைச் சந்தித்த மீனவர்களிடம் அவர் தெரிவித்திருந்தார். சுஷ்மா ஸ்வராஜின் இந்தப் பேச்சைக் கண்டித்து, மீனவர் சங்கங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..
விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..
விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?
நூலரங்கம்
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை
வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

