தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு யசோதா பென் மனு

yashoda-benஆமதாபாத்: தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு மோடியின் மனைவி யசோதா பென் மீண்டும் மனு அளித்துள்ளார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் யசோதா பென்னுக்கு துப்பாக்கி ஏந்திய 10 வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாநில தகவலறியும் அலுவலகத்தை யசோதா பென் அணுகியுள்ளார். அவர் சார்பில் வழக்கறிஞர் சம்மித் இரண்டாவது முறையாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பாதுகாப்பு வழங்குவதற்கான அரசு ஆணையை தம்மிடம் வழங்குமாறு கேட்டுள்ள அவர், இது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்திரா காந்தி தனது பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையும் அந்த மனுவில் யசோதா பென் தெரிவித்துள்ளார். 2014 நவம்பரில் இது போன்ற மனுவை அவர் தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் மாநில போலீசாரிடம் விளக்கம் கேட்ட மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் 4 மாதத்திற்கு பின்னர் மீண்டும் அவர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories