தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு யசோதா பென் மனு

Published:

yashoda-benஆமதாபாத்: தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு மோடியின் மனைவி யசோதா பென் மீண்டும் மனு அளித்துள்ளார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் யசோதா பென்னுக்கு துப்பாக்கி ஏந்திய 10 வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாநில தகவலறியும் அலுவலகத்தை யசோதா பென் அணுகியுள்ளார். அவர் சார்பில் வழக்கறிஞர் சம்மித் இரண்டாவது முறையாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பாதுகாப்பு வழங்குவதற்கான அரசு ஆணையை தம்மிடம் வழங்குமாறு கேட்டுள்ள அவர், இது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்திரா காந்தி தனது பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையும் அந்த மனுவில் யசோதா பென் தெரிவித்துள்ளார். 2014 நவம்பரில் இது போன்ற மனுவை அவர் தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் மாநில போலீசாரிடம் விளக்கம் கேட்ட மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் 4 மாதத்திற்கு பின்னர் மீண்டும் அவர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img