ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராணிதன் சிங் என்ற ராணுவ வீரர் அவருக்கு நிச்சயித்த பெண்ணை அவரது நண்பருக்கு விருந்தாக்க முயன்றதாக
எழுந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ராணுவ வீரர் ராணிதன் சிங்
விடுமுறை எடுத்து அவரது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இரு வீ ட்டார் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையி நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ராணுவ வீரர் ராணிதன் நெருங்கி பழகி அவருடன் உடலுறவும் வைத்துள்ளார்.

அதை காணொளியாக பதிவிட்டு அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும் அந்த காணொளியை அவரின் நண்பருக்கும் அனுப்பியுள்ளார்.அத்துடன் அந்த பெண்ணை தனது நண்பருக்கும் விருந்தாக்க முயன்றுள்ளார்.

இதனால் அந்த பெண் ராணுவ வீரர் ராணிதன் மீது கடும் கோபம் கொண்டு சம்பவங்களை அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை ஜோத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் ராணுவ வீரரை கைது விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மனைவியாக வர இருந்த பெண்னை நண்பருக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending