மனைவியாக வர இருந்த பெண்னை நண்பருக்கு விருந்தாக்க முயன்ற ராணுவ வீரர் கைது

Published:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராணிதன் சிங் என்ற ராணுவ வீரர் அவருக்கு நிச்சயித்த பெண்ணை அவரது நண்பருக்கு விருந்தாக்க முயன்றதாக
எழுந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ராணுவ வீரர் ராணிதன் சிங்
விடுமுறை எடுத்து அவரது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இரு வீ ட்டார் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையி நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ராணுவ வீரர் ராணிதன் நெருங்கி பழகி அவருடன் உடலுறவும் வைத்துள்ளார்.

அதை காணொளியாக பதிவிட்டு அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும் அந்த காணொளியை அவரின் நண்பருக்கும் அனுப்பியுள்ளார்.அத்துடன் அந்த பெண்ணை தனது நண்பருக்கும் விருந்தாக்க முயன்றுள்ளார்.

இதனால் அந்த பெண் ராணுவ வீரர் ராணிதன் மீது கடும் கோபம் கொண்டு சம்பவங்களை அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை ஜோத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் ராணுவ வீரரை கைது விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மனைவியாக வர இருந்த பெண்னை நண்பருக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img