papcikal
papcikal

முலாம்பழ பாப்சிகல்

தேவையானவை:

முலாம்பழம், தர்பூசணி
துண்டுகள் – தலா அரை கப்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – 4 டீஸ்பூன்

செய்முறை:

முலாம்பழம் மற்றும் தர்பூசணியின் தோல், விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். முலாம்பழத் துண்டுகளுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். தர்பூசணித் துண்டுகளுடன் மீதமுள்ள எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். பாப்சிகல் மோல்டின் பாதியளவுக்கு முலாம்பழ விழுதை ஊற்றி ஃப்ரீசரில் 5 மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து, அதன் மீது தர்பூசணி விழுதை ஊற்றி மோல்டை மூடி மீண்டும் ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைக்கவும். செட் ஆனவுடன் வெளியே எடுத்து பாப்சிகல் மோல்டுகளைக் குழாய் தண்ணீரில் சில நிமிடங்கள் காட்டி, பிறகு ஐஸ்க்ரீமை வெளியே எடுத்துச் சுவைக்கலாம்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

குறிப்பு:விரும்பியப் பழங்களை வைத்து பாப்சிகல் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending