June 16, 2025, 12:45 PM
32 C
Chennai

பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் மறைவு

பிரபல பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடுப்பி லட்சுமி நாராயணன் செவ்வாய்க்கிழமை இறந்தார். லட்சுமி நாராயணனுக்கு லீலாவதி என்ற மனைவியும், 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.udipi_lakshmi_narayanan கர்நாடக மாநிலம், உடுப்பி பகுதியை பூர்வீகமாககக் கொண்ட லட்சுமி நாராயணன், காஞ்சிபுரம் எல்லப்ப முதலியாரை குருவாகக் கொண்டு பரத நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றார். 1962-ஆம் ஆண்டு சென்னை வடபழனியில் “நாட்டிய மஞ்சரி’ என்ற நடனப் பள்ளியைத் தொடங்கி ஏராளமான பரத நாட்டியக் கலைஞர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார் லட்சுமி நாராயணன். இந்த நடனப் பள்ளி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேடை நாடகங்களுக்கு நடனம் அமைத்து வந்த லட்சுமி நாராயணன் நடிகர் சிவாஜி கணேசனின் நாடக மன்றத்தில் நடனக் கலை ஆசிரியராகப் பணியாற்றினார்.  “சுமதி என் சுந்தரி’, “சரஸ்வதி சபதம்’, “உழைக்கும் கரங்கள்’, “மீனாட்சி திருவிளையாடல்’, “காதலன்’, “சங்கமம்’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நடன இயக்குநர்கள் ராஜு சுந்தரம், பிரபுதேவா, நடனக் கலைஞர்கள் ஜெயந்தி ராமானுஜம், திவ்யா கஸ்தூரி ஆகியோருக்கு பரத நாட்டிய கலை ஆசிரியராக திகழ்ந்த அவர், 2003-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமனி விருதையும், கர்நாடக அரசின் கலாஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். விருகம்பாக்கம் மயானத்தில் புதன்கிழமை (மார்ச் 18) காலை 8 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories