December 6, 2025, 2:33 PM
29 C
Chennai

பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் மறைவு

பிரபல பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடுப்பி லட்சுமி நாராயணன் செவ்வாய்க்கிழமை இறந்தார். லட்சுமி நாராயணனுக்கு லீலாவதி என்ற மனைவியும், 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.udipi_lakshmi_narayanan கர்நாடக மாநிலம், உடுப்பி பகுதியை பூர்வீகமாககக் கொண்ட லட்சுமி நாராயணன், காஞ்சிபுரம் எல்லப்ப முதலியாரை குருவாகக் கொண்டு பரத நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றார். 1962-ஆம் ஆண்டு சென்னை வடபழனியில் “நாட்டிய மஞ்சரி’ என்ற நடனப் பள்ளியைத் தொடங்கி ஏராளமான பரத நாட்டியக் கலைஞர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார் லட்சுமி நாராயணன். இந்த நடனப் பள்ளி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேடை நாடகங்களுக்கு நடனம் அமைத்து வந்த லட்சுமி நாராயணன் நடிகர் சிவாஜி கணேசனின் நாடக மன்றத்தில் நடனக் கலை ஆசிரியராகப் பணியாற்றினார்.  “சுமதி என் சுந்தரி’, “சரஸ்வதி சபதம்’, “உழைக்கும் கரங்கள்’, “மீனாட்சி திருவிளையாடல்’, “காதலன்’, “சங்கமம்’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நடன இயக்குநர்கள் ராஜு சுந்தரம், பிரபுதேவா, நடனக் கலைஞர்கள் ஜெயந்தி ராமானுஜம், திவ்யா கஸ்தூரி ஆகியோருக்கு பரத நாட்டிய கலை ஆசிரியராக திகழ்ந்த அவர், 2003-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமனி விருதையும், கர்நாடக அரசின் கலாஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். விருகம்பாக்கம் மயானத்தில் புதன்கிழமை (மார்ச் 18) காலை 8 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories