பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் மறைவு

பிரபல பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடுப்பி லட்சுமி நாராயணன் செவ்வாய்க்கிழமை இறந்தார். லட்சுமி நாராயணனுக்கு லீலாவதி என்ற மனைவியும், 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.udipi_lakshmi_narayanan கர்நாடக மாநிலம், உடுப்பி பகுதியை பூர்வீகமாககக் கொண்ட லட்சுமி நாராயணன், காஞ்சிபுரம் எல்லப்ப முதலியாரை குருவாகக் கொண்டு பரத நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றார். 1962-ஆம் ஆண்டு சென்னை வடபழனியில் “நாட்டிய மஞ்சரி’ என்ற நடனப் பள்ளியைத் தொடங்கி ஏராளமான பரத நாட்டியக் கலைஞர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார் லட்சுமி நாராயணன். இந்த நடனப் பள்ளி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேடை நாடகங்களுக்கு நடனம் அமைத்து வந்த லட்சுமி நாராயணன் நடிகர் சிவாஜி கணேசனின் நாடக மன்றத்தில் நடனக் கலை ஆசிரியராகப் பணியாற்றினார்.  “சுமதி என் சுந்தரி’, “சரஸ்வதி சபதம்’, “உழைக்கும் கரங்கள்’, “மீனாட்சி திருவிளையாடல்’, “காதலன்’, “சங்கமம்’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நடன இயக்குநர்கள் ராஜு சுந்தரம், பிரபுதேவா, நடனக் கலைஞர்கள் ஜெயந்தி ராமானுஜம், திவ்யா கஸ்தூரி ஆகியோருக்கு பரத நாட்டிய கலை ஆசிரியராக திகழ்ந்த அவர், 2003-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமனி விருதையும், கர்நாடக அரசின் கலாஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். விருகம்பாக்கம் மயானத்தில் புதன்கிழமை (மார்ச் 18) காலை 8 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories