திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் மாலையில் ரஹ்மத்நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தமக்கு பழக்கமான மாணவருடன் தனியே பேசிக் கொண்டிருந்தாராம். இருவரும் தனியாக இருப்பதைப் பார்த்த சிலர் மாணவியை கடத்திச் சென்றுள்ளனர். மாணவி கடத்தப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதவி ஆணையர் மாதவன் தலைமையிலான மாணவியைத் தேடி வந்தனர். இதனிடையே கடத்தப்பட்ட மாணவியை இன்று இரவில் மீட்டனர். கடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் கடத்தப்பட்ட மாணவி மீட்பு: ஒருவர் கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

