பாரதி மோகன் இயக்கத்தில் “எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது“

Published:

engalukku-veru-kilaigal-illai ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்கும் “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் விக்ரம்சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ரக்ஷன் நடிக்கிறார். கதாநாயகியாக சாரா தேவா நடிக்கிறார். மற்றும் நிழல்கள்ரவி, சிங்கம்புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, போஸ்வெங்கட், டி.பி.கஜேந்திரன், டெல்லிகணேஷ், அப்புக்குட்டி,பிளாரன்ட் பெராரா, ஓசூர் மாதேஷ், சுடர்மதி, ரேகா, மதுமிதா, தேவதர்ஷினி, மதுரை புலி, காளிச்சரண், ஸ்டன்ட் சர்வியானந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – லால்பாபு இசை – தாஜ்நூர் பாடல்கள் – நா.முத்துகுமார், யுகபாரதி கலை – ராம் ஸ்டன்ட் – ஜாக்குவார் தங்கம் எடிட்டிங் – ராஜ்கீர்த்தி தயாரிப்பு நிர்வாகம் – சாமிநாதன், காளீஸ்வரன் தயாரிப்பு – ராமாபுரம் ராஜேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாரதிமோகன். இயக்குனரிடம் படம் பற்றி கேட்டோம்.. படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்திற்காக அமைச்சர் காத்துவாயனாக நடிக்கும் மனோபாலா ஏழை திருமணங்களை நடத்தி வைகிறார். மனோபாலா நடத்தி வைக்கும் திருமண ஜோடிகளில் அப்புகுட்டி – வர்ஷா ஜோடியும் ஒன்று. அமைச்சர் தடபுடலாகத் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அப்புகுட்டி – வர்ஷா கழுத்தில் தாலிகட்ட அதை பார்த்த சிங்கம்புலி அதிர்ச்சி அடைகிறார். ஏன்? எதற்கு என்பதற்கான விளக்கம் திரையில் என்றார் இயக்குனர் பாரதிமோகன். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை திருச்சி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img