சரி… இன்று போய் நாளை வா!

Published:

1236468 dmkfiles - 2026
#image_title
  • முரளி சீதாராமன்

ஹலோ கப்பல்… அவர் போலீஸ் டிரெய்னிங் எடுத்தவர்… ஞாபகம் வச்சிகிட்டு பதில் சொல்லணும்!

போலீஸ் / CBI விசாரணை என்பதில் இரண்டு வகை.

ஒன்று உரிய முறையில் லெஃப்டு அண்ட் ரைட் வாங்கி உண்மையை வரவழைப்பது!

இன்னொன்று சிரித்துக் கொண்டே 100 கேள்வி – 120 கேள்வி என்று கேட்பது!

அதில் சில மிக சாதாரணக் கேள்விகளாக இருக்கும்!

17 ஆவது கேள்வி, 48 ஆவது கேள்வி, 73 ஆவது கேள்வி இப்படி ஏதாவது வரிசையில் தள்ளித் தள்ளி சில சிடுக்கான கேள்விகள் இருக்கும்.

அந்த சிடுக்கில்தான் நீ TRAP ஆகிறாய்!

17,48, 73 ஆகியவற்றுக்கு நீ அளித்த பதில்களுக்குள் உள்ள முரண்பாடுதான் நீ சிக்கும் பொறி!

அந்தக் கேள்விகளை அடுத்தடுத்து வைக்க அவர் என்ன கேனையனா? IPS டா உ.பி அவர் IPS!

இது போக ஏலத்தொகை மாதிரி ஏற்றிவிட்டு உன்னை சிக்க வைக்கற டெக்னிக்கும் உண்டு!

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

“நீங்கள் 10 கப்பல் வாங்கினீர்களா?”

“இல்லை இல்லை – 2 தான் வாங்கினேன்!”

கரெக்ட்! இதுதான் எங்களுக்கு வேண்டும்.

“அழகிரி இப்படி அறிக்கை விட்டாரே?”

“அரை வேக்காட்டுத்தனமாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை!”

“ஓ! அப்போது அவர் அரை வேக்காடா?”

“அப்படிச் சொல்லவில்லை – அவருக்கு தகவல் சரியாகப் போகாமல் இருக்கலாம்!”

இப்போது சாட்சி ஆவேசமாகி…

“நீங்க மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் கிரயம் பண்ணி நிலம் வாங்கினீங்களே!”

(நமது IPS மூளையின் மைன்ட் வாய்ஸ் – “வா! வா! இதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்!” )

“என் மனைவி என்ன படித்துள்ளார் என்பது தெரியுமா?”

“தெரியாது!”

“அவர்கள் எந்த MNC ல் எந்தப் பொறுப்பில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?”

“தெரியாது!”

“நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த நிலத்தை – உரிய வரிகளை செலுத்தி வாங்கி முறைப்படி கணக்கு காட்டி வாங்கி இருப்பது தெரியுமா?”

“தெரியாது!”

“நாங்கள் அந்த நிலம் வாங்கிய முழு விவரத்தையும் முறைப்படி ஆவணப் படுத்தி இருப்பது தெரியுமா?”

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

“தெரியாது!”

“இப்படி எதுவுமே தெரியாமல் என் மேல் எப்படிக் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்?”

தொடர்ந்து…

“கனம் கோர்ட்டார் அவர்களே! இவருடைய பதில்கள் பதிவாகி உள்ளன – நான் இந்தப் பதிவுகளின் ஆதாரத்தின் மீது அவதூறு வழக்குப் பதியப் போகிறேன்!”

இனிமேல்தான் இருக்கு தம்பி IPS – போலீஸ் மூளையின் விளையாட்டு!

இது என்ன தெருமுனைக் கூட்டம் என்று நினைத்தாயா உ.பிஸ்? சோடாவைக் குடித்துவிட்டு மைக் முன்பாகக் கூவிவிட்டுப் போகலாம் என்பதற்கு?

கோர்ட் தம்பி கோர்ட்!

குறுக்கு விசாரணை பண்றவன் என்ஜினீரிங், வணிக நிர்வாக மேலாண்மை, போலீஸ் நடைமுறைகள் மூன்றிலும் கைதேர்ந்தவன்! வித்தகன்!

“எனக்கு ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு – நான் கிளம்பணும்!”

“சரி! இன்று போய் நாளை வா!”

Related articles

Recent articles

spot_img