மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

railway news - 2026
#image_title

வருகிற மார்ச் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகை புரிய உள்ளார் . அப்போது புதிய வழித்தடங்களில் ரயில் சேவைகளையும் துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

✓ சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி காரைக்குடி வழியாக இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்

✓ நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மதுரை வழியாக ஹைதராபாத் சார்லபள்ளி வரை அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவையும்

✓ மங்களூரில் இருந்து சோரனூர் பாலக்காடு பொள்ளாச்சி பழனி மதுரை வழியாக இராமேஸ்வரம் வரை வாராந்திர ரயிலும்

✓ பொள்ளாச்சி பழனி வழியாக தாம்பரம் மங்களூர் அம்ரித் பாரத் ரயில் சேவையும்

எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலத்தின் ஜோக்பானி வரை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்

துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. நிகழ்ச்சி தொடர்பான உத்தேச தகவல்கள் இன்றைய கேரள செய்தித்தாளில் தகவலாக வெளியிடப்பட்டுள்ளது .

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

மேலும் தற்போது இயங்கி வரும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயிலை தினசரி ரயிலாகவும் எர்ணாகுளத்தில் இருந்து செங்கோட்டை விருதுநகர் வழி ராமேஸ்வரத்திற்கு வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு கொல்லம் செங்கோட்டை வழியாக ஈரோடு கோயமுத்தூருக்கு தினசரி விரைவு ரயில் இயக்கமும் ரயில்வே துறை முடிவு செய்து வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த செய்தியில் பொள்ளாச்சி வழியாக தாம்பரம் மங்களூர் மற்றும் இராமேஸ்வரம் மங்களூர் ரயில்கள் தனது பயணத்தை துவங் கஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

விரைவில் இது தொடர்பான முழு அறிவிப்பு வழியாகவும் எதிர்பார்க்கப்படுகிறது ‌. மார்ச் ஒன்றாம் தேதி கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது …. எனவே புதிய ரயில் சேவைகள் துவக்கம் நடைபெறப்போவது உறுதியாகியுள்ளது .

அதே நேரத்தில் எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் செல்லும் இன்ப தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்படும்

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

திருச்செந்தூர் – தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை!

18 கி.மீ இணைக்கப்பட்டால் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தற்போதைய சிக்கல் என்ன? தற்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் நெல்லை வழியாகச் சுற்றிச் செல்வதால், 138 கி.மீ கூடுதல் பயண தூரமும், சுமார் 3 மணி நேர கூடுதல் பயண நேரமும் ஆகிறது.

தீர்வு என்ன? திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகநேரி வரையிலும், மறுபுறம் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து ஸ்பிக் நகர் வரையிலும் ஏற்கெனவே ரயில் பாதைகள் உள்ளன. எனவே, ஆறுமுகநேரிக்கும் – ஸ்பிக் நகருக்கும் இடையே வெறும் 18 கி.மீ தூரத்திற்குப் புதிய ரயில் பாதை அமைத்தால் மட்டுமே போதும்! இதன் மூலம் தூத்துக்குடி – திருச்செந்தூர் முழுமையான ரயில் இணைப்பைப் பெறும்.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

திட்டத்தின் பயன்கள்:
பயண நேரம் மற்றும் தூரம் கணிசமாகக் குறையும். ஆத்தூர், பழையகாயல், புன்னக்காயல் மற்றும் ஸ்பிக் நகர் பகுதி மக்களுக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும். வாஞ்சி மணியாச்சி மற்றும் மதுரை வழியாகப் புதிய மாற்று வழித்தடம் உருவாகும்.

தென் மாவட்ட மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ரயில்வே துறை விரைந்து நிறைவேற்றுமா என விருதுநகர் மதுரை திண்டுக்கல் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

Entertainment News

Popular Categories