February 19, 2026, 8:02 AM
24.4 C
Chennai

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

railway news - 2026
#image_title

வருகிற மார்ச் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகை புரிய உள்ளார் . அப்போது புதிய வழித்தடங்களில் ரயில் சேவைகளையும் துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

✓ சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி காரைக்குடி வழியாக இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்

✓ நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மதுரை வழியாக ஹைதராபாத் சார்லபள்ளி வரை அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவையும்

✓ மங்களூரில் இருந்து சோரனூர் பாலக்காடு பொள்ளாச்சி பழனி மதுரை வழியாக இராமேஸ்வரம் வரை வாராந்திர ரயிலும்

✓ பொள்ளாச்சி பழனி வழியாக தாம்பரம் மங்களூர் அம்ரித் பாரத் ரயில் சேவையும்

எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலத்தின் ஜோக்பானி வரை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்

துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. நிகழ்ச்சி தொடர்பான உத்தேச தகவல்கள் இன்றைய கேரள செய்தித்தாளில் தகவலாக வெளியிடப்பட்டுள்ளது .

மேலும் தற்போது இயங்கி வரும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயிலை தினசரி ரயிலாகவும் எர்ணாகுளத்தில் இருந்து செங்கோட்டை விருதுநகர் வழி ராமேஸ்வரத்திற்கு வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு கொல்லம் செங்கோட்டை வழியாக ஈரோடு கோயமுத்தூருக்கு தினசரி விரைவு ரயில் இயக்கமும் ரயில்வே துறை முடிவு செய்து வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த செய்தியில் பொள்ளாச்சி வழியாக தாம்பரம் மங்களூர் மற்றும் இராமேஸ்வரம் மங்களூர் ரயில்கள் தனது பயணத்தை துவங் கஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

விரைவில் இது தொடர்பான முழு அறிவிப்பு வழியாகவும் எதிர்பார்க்கப்படுகிறது ‌. மார்ச் ஒன்றாம் தேதி கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது …. எனவே புதிய ரயில் சேவைகள் துவக்கம் நடைபெறப்போவது உறுதியாகியுள்ளது .

அதே நேரத்தில் எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் செல்லும் இன்ப தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்படும்

திருச்செந்தூர் – தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை!

18 கி.மீ இணைக்கப்பட்டால் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தற்போதைய சிக்கல் என்ன? தற்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் நெல்லை வழியாகச் சுற்றிச் செல்வதால், 138 கி.மீ கூடுதல் பயண தூரமும், சுமார் 3 மணி நேர கூடுதல் பயண நேரமும் ஆகிறது.

தீர்வு என்ன? திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகநேரி வரையிலும், மறுபுறம் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து ஸ்பிக் நகர் வரையிலும் ஏற்கெனவே ரயில் பாதைகள் உள்ளன. எனவே, ஆறுமுகநேரிக்கும் – ஸ்பிக் நகருக்கும் இடையே வெறும் 18 கி.மீ தூரத்திற்குப் புதிய ரயில் பாதை அமைத்தால் மட்டுமே போதும்! இதன் மூலம் தூத்துக்குடி – திருச்செந்தூர் முழுமையான ரயில் இணைப்பைப் பெறும்.

திட்டத்தின் பயன்கள்:
பயண நேரம் மற்றும் தூரம் கணிசமாகக் குறையும். ஆத்தூர், பழையகாயல், புன்னக்காயல் மற்றும் ஸ்பிக் நகர் பகுதி மக்களுக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும். வாஞ்சி மணியாச்சி மற்றும் மதுரை வழியாகப் புதிய மாற்று வழித்தடம் உருவாகும்.

தென் மாவட்ட மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ரயில்வே துறை விரைந்து நிறைவேற்றுமா என விருதுநகர் மதுரை திண்டுக்கல் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Topics

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

சரி… இன்று போய் நாளை வா!

குறுக்கு விசாரணை பண்றவன் என்ஜினீரிங், வணிக நிர்வாக மேலாண்மை, போலீஸ் நடைமுறைகள் மூன்றிலும் கைதேர்ந்தவன்! வித்தகன்!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்; தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!

தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. இதில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்:

Entertainment News

Popular Categories