மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

railway news - 2026
#image_title

வருகிற மார்ச் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகை புரிய உள்ளார் . அப்போது புதிய வழித்தடங்களில் ரயில் சேவைகளையும் துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

✓ சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி காரைக்குடி வழியாக இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்

✓ நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மதுரை வழியாக ஹைதராபாத் சார்லபள்ளி வரை அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவையும்

✓ மங்களூரில் இருந்து சோரனூர் பாலக்காடு பொள்ளாச்சி பழனி மதுரை வழியாக இராமேஸ்வரம் வரை வாராந்திர ரயிலும்

✓ பொள்ளாச்சி பழனி வழியாக தாம்பரம் மங்களூர் அம்ரித் பாரத் ரயில் சேவையும்

எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலத்தின் ஜோக்பானி வரை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்

துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. நிகழ்ச்சி தொடர்பான உத்தேச தகவல்கள் இன்றைய கேரள செய்தித்தாளில் தகவலாக வெளியிடப்பட்டுள்ளது .

மேலும் தற்போது இயங்கி வரும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயிலை தினசரி ரயிலாகவும் எர்ணாகுளத்தில் இருந்து செங்கோட்டை விருதுநகர் வழி ராமேஸ்வரத்திற்கு வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு கொல்லம் செங்கோட்டை வழியாக ஈரோடு கோயமுத்தூருக்கு தினசரி விரைவு ரயில் இயக்கமும் ரயில்வே துறை முடிவு செய்து வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த செய்தியில் பொள்ளாச்சி வழியாக தாம்பரம் மங்களூர் மற்றும் இராமேஸ்வரம் மங்களூர் ரயில்கள் தனது பயணத்தை துவங் கஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

விரைவில் இது தொடர்பான முழு அறிவிப்பு வழியாகவும் எதிர்பார்க்கப்படுகிறது ‌. மார்ச் ஒன்றாம் தேதி கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது …. எனவே புதிய ரயில் சேவைகள் துவக்கம் நடைபெறப்போவது உறுதியாகியுள்ளது .

அதே நேரத்தில் எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் செல்லும் இன்ப தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்படும்

திருச்செந்தூர் – தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை!

18 கி.மீ இணைக்கப்பட்டால் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தற்போதைய சிக்கல் என்ன? தற்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் நெல்லை வழியாகச் சுற்றிச் செல்வதால், 138 கி.மீ கூடுதல் பயண தூரமும், சுமார் 3 மணி நேர கூடுதல் பயண நேரமும் ஆகிறது.

தீர்வு என்ன? திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகநேரி வரையிலும், மறுபுறம் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து ஸ்பிக் நகர் வரையிலும் ஏற்கெனவே ரயில் பாதைகள் உள்ளன. எனவே, ஆறுமுகநேரிக்கும் – ஸ்பிக் நகருக்கும் இடையே வெறும் 18 கி.மீ தூரத்திற்குப் புதிய ரயில் பாதை அமைத்தால் மட்டுமே போதும்! இதன் மூலம் தூத்துக்குடி – திருச்செந்தூர் முழுமையான ரயில் இணைப்பைப் பெறும்.

திட்டத்தின் பயன்கள்:
பயண நேரம் மற்றும் தூரம் கணிசமாகக் குறையும். ஆத்தூர், பழையகாயல், புன்னக்காயல் மற்றும் ஸ்பிக் நகர் பகுதி மக்களுக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும். வாஞ்சி மணியாச்சி மற்றும் மதுரை வழியாகப் புதிய மாற்று வழித்தடம் உருவாகும்.

தென் மாவட்ட மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ரயில்வே துறை விரைந்து நிறைவேற்றுமா என விருதுநகர் மதுரை திண்டுக்கல் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories