
மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை பிப் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். கோவில் திருநடையை மேல் சாந்தி திறந்து வைத்ததும் ஆழியில் நெய் தீபம் ஏற்றி கோவிலில் தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்குவார்.
அன்று எந்த சிறப்பு பூஜையும் இல்லை. பிப் 13-ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து சிறப்பு பூஜைகள் தொடங்கி, மதியம் 1 மணிக்கு கோவில் நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை படி பூஜை நடைபெறும்.
(இது 13 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும்). அபிஷேகம் காலை நேரத்தில் மட்டும் காலை 5:15 முதல் 7 மணி வரை, பின்னர் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும். (இது 13 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும்).
இரவு தினமும் 9:50 மணிக்கு ஹரிவராசனம் கீர்த்தனை பாடி,
10 மணிக்கு கோவில் நடை மூடப்படும் பிப் 12 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்க
ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.முன் பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்




