January 19, 2025, 10:19 AM
25.7 C
Chennai

மருத்துவமனையில் நடராஜன் திடீர் அனுமதி; மீண்டும் பரோல் கோரும் சசிகலா!

சென்னை: ம.நடராஜன் மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப் பட்டார்.

இதனிடையே அவரது உடல் நலம் குறித்து நேற்று பரவிய தகவல்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், மதிமுக., பொதுச் செயலர் வைகோ, திடீரென நேற்று இரவு மருத்துவமனையில் நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார். ஆனால், மருத்துவர்கள் அவர் உறக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், நீண்ட நாள் நண்பர் என்பதால் காண வந்ததாகவும், ஆனால் அவர் தூக்கத்தில் இருந்ததாகவும் கூறினார்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனைப் பார்க்க சசிகலா சிறை விடுப்பு கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ:  நாளை திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்! விரிவான ஏற்பாடுகள்!

பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் திங்கள் கிழமை நாளை பரோல் தாக்கல் செய்ய உள்ளார் என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே கடந்த அக்டோபரில், உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தனது கணவரைப் பார்க்க சசிகலா பரோலில் வெளியே வந்து ஆறு நாட்கள் சென்னையில் இருந்தார். அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் அப்போது சிறை நிர்வாகம் பரோல் அளித்தது குறிப்பிடத் தக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.